search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்"

    • கிருஷ்ணசாமி கோவில்களில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது.
    • கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி பவனி நடந்தது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. மாலையில் தீபாராதனையை தொடர்ந்து கோவிலில் உள்ள உதய மார்த்தாண்ட மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் குழந்தை கண்ணன், பலராமன் ஐம்பொன் விக்கிரகங்கள் வைக்கப்பட்டன. பின்னர் பக்தர்கள் தொட்டிலை அசைத்து மகிழ்ந்தனர்.

    இரவில் கிருஷ்ணன் கோவிலில் கலச அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதேபோல் அருமனை அருகே உள்ள முழுக்கோடு, கடலிகோடு ஆகிய பகுதிகளில் உள்ள கிருஷ்ணசாமி கோவில்களில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி கடலிகோடு கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி பவனி நடந்தது. பவனி புண்ணியம் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து தொடங்கி முழுக்கோடு வழியாக கடலிகோடு கிருஷ்ணசாமி கோவிலில் நிறைவடைந்தது. இதில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்தும், முத்துக்குடையுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த கோவிலில் கடந்த மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
    • இன்று (செவ்வாய்க்கிழமை) பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

    இதன் 41-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.30 மணிக்கு கிருஷ்ணன் கோவில், குலசேகரப்பெருமாள் கோவில், சாஸ்தா கோவில் ஆகியவற்றில் சிறப்பு கலச அபிஷேகம் போன்றவை நடைபெறும்.

    காலை 9.30 மணிக்கு மேல் வழக்கம்போல் பக்தர்கள் ஒற்றக்கல் மண்டபத்தில் ஏறி சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள், மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    • கடந்த மாதம் 6-ந் தேதி இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • முனிக்கல் மடம் நந்தவனத்தில் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

    கன்னியாகுமாரி:

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலும் ஒன்றாகும். கடந்த மாதம் 6-ந் தேதி இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நாளை (4-ந் தேதி) நிறைபுத்தரிசி பூஜை இந்த கோவிலில் நடைபெறுகிறது. நாளை காலை 5 மணி அளவில் திருவட்டார் பஸ் நிலைய அருகில் உள்ள முனிக்கல் மடம் நந்தவனத்தில் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

    அதன் பிறகு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பூஜை செய்யப்படுகிறது. அதன்பின் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆதிகேசவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி விக்கிரகங்கள் முன்பு அவை படைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். பூஜைகளுக்கு பின்னர் சந்தன பிரசாதத்துடன் நெற்கதிர்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 6-ந்தேதி நடந்தது.
    • பூஜைகள், பஞ்சவாத்தியம், நாதஸ்வரம், தவில் இல்லாமல் நடக்கிறது.

    108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 6-ந்தேதி நடந்தது. அதன்பின்னர் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதன்படி நேற்று கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் சாமிகும்பிட வருகின்றனர்.

    பூஜைகள், பஞ்சவாத்தியம், நாதஸ்வரம், தவில் இல்லாமல் நடக்கிறது. எனவே இசைக்கலைஞர்களை உடனே நியமிக்க அறநிலையத்துறை முன்வரவேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • இந்த கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
    • 7 ஆண்டுக்கு பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகளுக்காக 7 ஆண்டுக்கு முன்பு கருவறையில் இருந்த அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் பாலாலயத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் கருவறையில் பாம்பணை மீது பள்ளி கொண்டு அருள்பாலிக்கும் ஆதிகேசவ பெருமாளை ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு இல்லாமல் போனது.

    கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் இருந்து சாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அனுமதிக்கப்படவில்லை. இதுபற்றிய செய்தி, 'தினத்தந்தி'-யில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் நின்று சாமியை பக்தர்கள் தரிசனம் செய்ய பாதுகாப்பு கம்பிகள் இணைக்கும் பணி நேற்று முன் தினம் முடிந்தது.

    அதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின்னர் 8.30 மணி வரையும் பக்தர்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    7 ஆண்டுக்கு பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி சாமி தரிசனம் செய்த பக்தர்கள் பரவசத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.

    • 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றாக திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் உள்ளது.
    • ஒற்றைக் கல் மண்டபத்தில் பாதுகாப்பு கம்பிகள் பொருத்தப்பட்டது.

    108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு கோவிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    7 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்கருவறையில் இருந்து பாலாலயத்துக்கு அர்ச்சனா மூர்த்தி சிலைகள் மாற்றப்பட்ட பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பாம்பணை மீது பள்ளிகொண்டிருக்கும் ஆதிகேசவ பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    கும்பாபிஷேகம் மற்றும் திருவிழா முடிந்த பின்னர் காலை நேர பூஜை மற்றும் மாலை நேர தீபாராதனைக்குப்பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி கருவறையில் உள்ள ஆதிகேசவ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருவிழா முடிந்தபின்னரும் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    அதன் எதிரொலியாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் ஒற்றைக் கல் மண்டபத்தில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து நேற்று ஒற்றைக் கல் மண்டபத்தில் பாதுகாப்புடன் நிற்பதற்கு வசதியாக பாதுகாப்பு கம்பிகள் பொருத்தப்பட்டது. இதனால் மண்டபத்தில் ஏறும் பக்தர்கள் பாதுகாப்பாக நின்று சாமியை தரிசிக்க முடியும்.

    • ஆதிகேசவ பெருமாளுக்கு பலாக்காயும், கஞ்சியும் நிவேத்யமாக படைக்கப்பட்டது.
    • இன்று காலை முதல் மதியம் வரை பெருந்தமிர்து சிறப்பு பூஜை நடக்கிறது.

    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு நாள்தோறும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் விடுமுறைநாளான நேற்று காலை முதலே உள்ளூர், வெளியூர் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் வாகனங்களில் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று ஆடி மாதம் முதல் தேதி என்பதால் ஆதிகேசவ பெருமாளுக்கு பலாக்காயும், கஞ்சியும் நிவேத்யமாக படைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆடி மாதம் 2-ம் நாள் பட்டுவஸ்திரம், பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் ஆதிகேசவ பெருமாளுக்கு படைக்கும் பெருந்தமிர்து பூஜை நடைபெறவதும் வழக்கம்.

    அதன்படி ஆடி 2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) காலை முதல் மதியம் வரை பெருந்தமிர்து சிறப்பு பூஜை நடக்கிறது.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கருவறையில் இருந்து பாலாலயத்துக்கு அர்ச்சனா மூர்த்தி சிலைகளை மாற்றப்பட்டது. அதன்பிறகு ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பாம்பணை மீது பள்ளிகொண்டிருக்கும் ஆதிகேசவப்பெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. தற்போது கும்பாபிஷேகத்தையொட்டி அர்ச்சனா மூர்த்தி சிலைகள் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பூஜை நடந்து வருகிறது.

    கும்பாபிஷேகம் மற்றும் திருவிழா முடிந்த பிறகு ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி கருவறையில் உள்ள ஆதிகேசவப்பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து கோவில் மேலாளர் மோகன்குமார் கூறுகையில், ஒற்றைக்கல் மண்டபத்தின் இடது மற்றும் வலது புறம் பள்ளமானது.

    முன்பு இந்த பகுதிகளில் பாதுகாப்பு கம்பிகள் போடப்பட்டிருந்தது. இதனால் மண்டபத்தில் ஏறும் பக்தர்கள் பாதுகாப்பாக நிற்க முடியும். சீரமைப்பு பணிகள் நடந்த போது அவை மாற்றப்பட்டது. எனவே, ஒற்றைக்கல் மண்டபத்தை சுற்றி பாதுகாப்பு கம்பிகள் அமைத்த பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். விரைவில் ஒற்றைக்கல் மண்டபம் மீது பாதுகாப்பு கம்பிகள் பொருத்தி சாமி தரிசனம் செய்வதற்கு அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
    • இன்று 11 மணியளவில் ஆதிகேசவப்பெருமாளுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின்பு தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு செல்கிறார்கள். இங்கு கடந்த 9-ந்தேதி முதல் சிறப்பு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள், சாமி பவனி வருதல் போன்றவை நடந்தது. நேற்று முன்தினம் இரவு சாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதலும், நேற்று இரவு சாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.

    விழாவில் இன்று (வியாழக்கிழமை) ஆராட்டு விழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி, மங்கள ஆராத்தி, ஆராட்டு பலி, ஆராட்டுக்கு எழுந்தருளல் போன்றவை நடைபெறும்.பூவங்கா பறம்பு ஆதிராவின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. 11 மணியளவில் பரளியாறு பாயும் கிழக்கு நடையில் ஆதிகேசவப்பெருமாளுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • திருவட்டார் கோவிலின் வெளியே குலசேகர பெருமாள் சன்னதி உள்ளது.
    • கும்பாபிஷேகத்துக்கு பிறகு குலசேகர பெருமாள் சன்னதியில் பூஜை நடத்தப்படமால் பூட்டியே கிடந்தது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் கொடிமர பிரதிஷ்டையை தொடர்ந்து திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 6 நாட்கள் திருவிழா கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது. நேற்று 2-வது நாள் திருவிழா நடந்தது. காலையிலும், மாலையிலும் ஸ்ரீபூதபலி எழுந்தருளல், மதியம் ஸ்ரீபலி, இரவு பக்தி இன்னிசை ஆகியவை நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்துக்கு பிறகு கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டம் மட்டுமல்லாது, பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசிக்க வந்தனர். அவர்கள் வந்த வாகனங்கள் வெகுதூரத்துக்கு நிறுத்தப்பட்டிருந்தது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் உள்ளே ஆதிகேசவ பெருமாள் சன்னதி, வேணுகோபாலன் சன்னதி, சாஸ்தா சன்னதி ஆகியவை உள்ளன. கோவிலின் வெளியே குலசேகர பெருமாள் சன்னதி உள்ளது. அந்த சன்னதி கும்பாபிஷேகத்துக்கு பிறகு திறக்கப்பட்டது. கும்பாபிஷேகத்துக்கு மறுநாள் குலசேகர பெருமாள் சன்னதி மாலை பூஜை நடத்தப்படமால் பூட்டியே கிடந்தது.

    இதனால் பக்தர்கள் வருத்தப்பட்டு, கோவிலில் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து குலசேகர பெருமாள் சன்னதி காலை, மாலை திறந்து இருக்கும் என்று இணை ஆணையர் அறிவித்தார். இந்த நிலையில் நேற்று காலையிலும் குலசேகர பெருமாள் சன்னதி திறக்கப்படவில்லை. பக்தர்கள் கோவில் மேலாளரிடம் முறையிட்ட பின்னரே சன்னதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. குலசேகர பெருமாள் சன்னதியை தினமும் திறந்து, பூஜை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். சன்னதி திறக்கப்படாததற்கு அர்ச்சகர்கள் குறைவாக இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

    கும்பாபிஷேகம் நடந்துள்ளதால், பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதாலும் அனைத்து சன்னதிகளையும் திறந்து பூஜை நடத்த அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. மேலும் இங்கு பணியாற்றிய நாதஸ்வர கலைஞர், தவில் கலைஞர்கள் ஓய்வு பெற்ற பின்னர் இதுவரை புதிதாக இசைக்கலைஞர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது திருவிழா நடைபெறுவதால் தற்காலிக கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த பணி இடத்துக்கும் கலைஞர்களை நியமித்து கோவில் பூஜைகள் சிறப்பாக நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    • கொடிமர பிரதிஷ்டையையொட்டி 6 நாட்கள் சிறப்பு திருவிழா நடத்தப்படுகிறது.
    • வருகிற 14-ந் தேதி வரை 6 நாட்கள் சிறப்பு திருவிழா நடைபெறுகிறது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு கோவிலில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று நீண்ட வரிசையில் நின்றபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் காலையில் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்துக்கு பிரதிஷ்டை நடந்தது. முன்னதாக கணபதி ஹோமத்தை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தின் உச்சியில் பொருத்த வேண்டிய கருடாழ்வார் சிலை, கொடிமரத்தில் கட்டப்பட உள்ள கொடிமரக்கயிறு, கொடி ஆகியவை சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் கோவில் தந்திரி கோகுல் முன்னிலையில் ஊர்வலமாக 72 அடி உயர கொடிமரத்தின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு முதலில் கருடாழ்வார் சிலை பொருத்தப்பட்டது. பின்னர் அந்த சிலைக்கும், கொடிமர பீடத்திற்கும் அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடிமர பிரதிஷ்டை நிகழ்ச்சியில் இஸ்கான் அமைப்பின் தலைவர் மது பண்டிட், குமாரகோவில் முருகன் குழும தொழில் அதிபர் சிதறால் எஸ்.ராஜேந்திரன், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், அறநிலையத்துறை பொறியாளர் ராஜ்குமார், கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் மேலாளர் மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மதியம் கே.கே.எம். குழுமம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கொடிமர பிரதிஷ்டையையொட்டி 6 நாட்கள் சிறப்பு திருவிழா நடத்தப்படுகிறது. இதனால் நேற்று மாலை தீபாராதனையை தொடர்ந்து கொடிமரத்தில் கருடன் இலச்சினை கொண்ட கொடி ஏற்றப்பட்டது. வருகிற 14-ந் தேதி வரை 6 நாட்கள் சிறப்பு திருவிழா நடைபெறுகிறது. தினமும் வழக்கமான பூஜைகள், காலை, மாலையில் ஸ்ரீபூதபலி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி கோவில் அரசமரத்தையொட்டிய பகுதியிலும், 14-ந் தேதி காலையில் ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பு ஆராட்டு கோவிலின் கிழக்கு வாசல் பகுதியையொட்டிய பரளியாற்றிலும் நடைபெறும்.

    • 13-ந்தேதி ஆதிகேசவப்பெருமாள் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது
    • 14-ந்தேதி ஆராட்டு விழா நடைபெறுகிறது.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். கோவிலில் நேற்று பிரம்ம கலச பூஜை, அபிஷேகம், மண்டல பூஜை, கொடிமர பூஜை, பஜனை போன்றவை நடந்தன. இங்கு 72 அடி உயரம் உள்ள புதிய கொடிமரம் நிறுவப்பட்டு, தங்க முலாம் பூசிய செம்புக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடிமர பிரதிஷ்டை இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு கொடிமரத்தில் கருடன் இலச்சினை கொண்ட கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து வரும் 14-ந் தேதி வரை சிறப்பு திருவிழா நடக்கிறது.

    திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள், காலை மாலையில் ஸ்ரீபூதபலி எழுந்தருளல் போன்றவை நடைபெறும். 13-ந் தேதி ஆதிகேசவப்பெருமாள் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 14-ந் தேதி ஆராட்டு விழாவும் நடைபெறும். இந்த நிலையில் நேற்று கொடிமரத்தின் உச்சியில் பொருத்தப்பட உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கருடாழ்வார் சிலையை இஸ்கான் அமைப்பு தலைவர் மது பண்டிட், கோவில் தந்திரி கோகுலிடம் ஒப்படைத்தார்.

    பின்னர் கருடாழ்வார் சிலைக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவில் அர்ச்சகர் கருடாழ்வார் சிலையை தலையில் வைத்தபடி பக்தர்கள் புடைசூழ கோவில் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக வந்தார். தொடர்ந்து சிலைக்கு உதயமார்த்தாண்ட மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    • கொடிமர பிரதிஷ்டை செய்தால் திருவிழா எடுக்க வேண்டும் என்பது ஆகம விதிகளில் ஒன்று.
    • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த புதன்கிழமை மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த புதன்கிழமை மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் லட்சக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த கோவிலில் காலை மாலை வேளைகளில் பூஜை நடைபெற்று வருகிறது. இதில் அதிக அளவில் பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று காலை 5 மணி அளவில் கணபதிஹோமம் பிராயசித்த ஹோமம், தத்துவஹோமம், தத்துவகலசம் பிரம்ம கலச பூஜை, நித்திர கலச பூஜை ஆகிய பூஜைகள் காலையில் நடைபெறுகிறது.

    காலை 6 மணி அளவில் அபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 12 மணியளவில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்க படுகிறது. மாலை 5 மணி அளவில் மண்டல பூஜை கொடிமரத்திற்கு ஸ்தல சுத்தி, துவஜாதி வாசம் அத்தாழ பூஜை ஆகிய பூஜைகள் நடைபெறுகிறது.

    மாலை 7 மணி அளவில் திருவட்டார் ஆரபி கலாலயம் குழுவினரின் பக்தி பஜனை நடைபெறுகிறது.

    ஆலயத்தில் நேற்று கொடிமர பிரதிஷ்டை பூஜைகள் துவங்கியது. நாளைகாலை 5 மணிக்கு 72 அடி உயர கொடிமரம் பிரதிஷ்டை நடைபெறுகிறது மாலை திருவிழாவுக்காக கொடியேற்றம் நிகழ்ச்சி ஆகியன நடக்கிறது. பதினொன்றாம் நாளான நாளை மாலை 5 மணிக்கு ஸ்ரீபூதபலி, அத்தாழ பூஜை, நடக்கிறது.ஆறு நாட்கள் திருவிழா

    கொடிமர பிரதிஷ்டை செய்தால் திருவிழா எடுக்க வேண்டும் என்பது ஆகம விதிகளில் ஒன்று.

    அதனால் நாளை மாலை புதியதாக அமைக்கப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டு ஆறு நாட்கள் திருவிழா நடக்கிறது.

    கொடி மரத்திற்காக கேரளமாநிலம் பந்த னந்திட்டை மாவட்டம் கோன்னி வனப்பகுதியில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந்தேதி 70 அடி உயரம் கொண்ட பிரமாண்ட தேக்கு மரம் டிரைலர் வாகனத்தில் கொண்டு வரப்பட்டது.

    பின்னர் கோவில் மேற்குவாசல் பகுதியில் நிறுவப்பட்டது. கும்பா பிஷேகத்திற்கு 200 கிலோ செம்பு பயன்படுத்தி, 42 கவசங்கள் உருவா க்கப்பட்டது. இந்த கவச ங்கள் கேரள மாநிலம் காயங்குளம் பகுதியில் உருவாக்கப்பட்டது.

    பின்னர் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒன்றரை கிலோ தங்க முலாம் பூசப்பட்டது. வெள்ளியில் செய்யப்பட்ட கருடாழ்வார் சிலை செய ப்பட்டு அதன்மீது தங்கமு லாம் பூசப்பட்டது.

    இப்போது அந்த கருடாழ்வார் சிலை கொடி மரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. இதன்படி கருடாழ்வார் சிலையும் சேர்த்து 72 அடி உயரம் கொண்டதாக இந்த கொடிமரம் உள்ளது.

    இந்த கொடிமரத்துக்காக இஸ்கான் அமைப்பின் தலைவர் மது பண்டிட் நிதி ஒதுக்க, ஸ்தபதி பந்தியூர் வினோத்பாபு தலைமையில் தங்கமுலாம் பூசிய செம்புக்க வசம் அமைக்கும் பணி நடந்தது.

    நாளை மாலை ஆறரை மணிக்கு மேல் கோவில் தீபாராதனையை த்தொடந்து கொடிமரத்தில் கருடன் இலச்சினை கொண்ட கொடி ஏற்றப்படுகிறது.

    வரும் 14. ம் தேதி வரை திருவிழா பூஜைகள், காலை மாலையில் ஸ்ரீபூதபலி எழுந்தருளல்

    13-ந்தேதி ஆதிகே சவப்பெ ருமாள் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்வு கோவில் அரசம ரத்தை யொட்டிய பகுதியில் நடைபெறும்.

    14ந்தேதி காலை ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பு ஆறாட்டு கோவிலி ன் கிழக்கு வாசல் பகுதியை யொட்டிய பரளியாற்று கிழக்கே கடவில் நடை பெறுகிறது.

    ×